சென்னை: மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்; அதையே பாஜக செய்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டியவர்களை டெல்லிக்கு வந்து ஒன்றிய அரசு போராட்டம் நடத்த வைத்துள்ளது. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, பிரதமர் ஆனதும் மாநிலங்களின் உரிமையை பறித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.