கும்பகோணம்: அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒன்றாக இணையவேண்டும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வந்தால் தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாறும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.