இப்பணிகள் அனைத்து முடிவடைந்து, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பெரம்பூர் எம்எல்ஏவுமான ஆர்.டி.சேகர், ஆர்கே நகர் எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஆர்கே நகர் கிழக்கு பகுதி செயலாளர் லட்சுமணன், 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா நரேஷ், திமுக நிர்வாகிகள், அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.