சென்னை: 580 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயாராக உள்ளது என மாநில கல்விக் கொள்கை குழு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு மாநில கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. 4 பேர் கொண்ட குழு பொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 180 பக்கமுள்ள பரிந்துரைகள், 400 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. சூழப்பம் ஏற்படாமல், பரிந்துரைகளை சரியாக மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.