சென்னை: அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான அறிக்கையானது பிப்ரவரி 9ஆம் தேதி கிடைத்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதம் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளது.