கோடநாடு வழக்கில் 9 பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு..!!

உதகை: கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 பொருட்களை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். கோடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா, சசிகலா அறைகளில் இருந்து சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள முனிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்