சென்னை: ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தாமோ. அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.