அப்போது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள், காரை ஓரமாக நிறுத்துமாறு டிரைவர் அழகுமுத்துவிடம் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஓட்டலில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண் (32), சதீஷ் (28), ரூபன் (35), செந்தில் குமார் (43) ஆகியோர் டிரைவர் அழகுமுத்துவை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து டிரைவர் சக டிரைவர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், 40க்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள் ஓட்டல் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த வந்த தேனாம்பேட்டை போலீசார், போராட்டம் நடத்திய டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து டிரைவர்கள் கலைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.