அடுத்த ஆண்டு முதல் ஸ்டார் 3.0 அறிமுகம்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பதிவுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்கும் ரூ.323.45 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டார் 3.0 திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசாணை ெவளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக இணையதள அமைப்பிலான ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் தற்போது சேவை வழங்கப்பட்டு வருகிறது.பதிவுத்துறை கணினி மயமாக்கலில் முதல்வரின் உத்தரவின்படி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனடிப்படையில் தற்போதுள்ள ‘ஸ்டார் 2.0’ திட்டம், அதிநவீன தொழில் நுட்ப திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த கடந்த 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலாளரின் தலைமையிலான மாநில பதிவுத்துறை தலைவர் அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென திட்ட ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும், திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றைத் தணிக்கை செய்ய 3ம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்டார் 3.0’ திட்டமானது பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்