சென்னை : திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.