படிக்கட்டில் பயணம் செய்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பரிதாபமாக பலியானார். பல்லாவரம் – குரோம்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே, சிறுவன் சடலம் ஒன்று கிடைப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சோனி (16) என்பதும், உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்வதற்காக அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்துள்ளான்.

அப்போது சிறுவன் மட்டும் ரயில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளான். இதில், எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், அதே ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு