திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த மலையாண்டி(56), வெளியே சென்று வரும் முகாம் அகதிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. விசாரணையில் எஸ்.எஸ்.ஐ மலையாண்டி லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மலையாண்டியை நேற்றுமுன்தினம் பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் காமினி அதிரடியாக உத்தரவிட்டார்.