இதனைத் தொடர்ந்து 9ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு கோயில் ஹ்ருத்தாப நாசினி குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவர் 3 முறை குளத்தில் மூழ்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வைத்திய வீரராகவரை வழிபட்டனர். கோயில் குளம் ஆழமாக உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.