பெருமழை பெய்து கொண்டிருந்தபோதே களத்தில் கால் பதித்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின். நிவாரணப் பணிகள் ராணுவ மீட்பு நடவடிக்கை போல் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டதால் களத்திலே அரசு ஒரு புறம் என்றாலும், எங்களைப் போன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றியதால் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்களில் திரும்பியது. இதிலும் அரசியல் செய்ய முடியவில்லை என்பதற்காக தற்போது பழைய பல்லவியை புது மெட்டில் பாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த பிரச்னையில் யாரையும் கைது செய்யவில்லை. இரு தரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. முழுமையாக ஆராய்ந்து அதன் மீது சட்ட நடவடிக்கை ஒரு புறம் என்றாலும், சுமூகமான சூழ்நிலை நிலவுவதற்கு மறுபுறம் நடவடிக்கை எடுத்து அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் அனைவருக்கும் முழு திருப்தி ஏற்படும் வகையிலான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.