சென்னை: ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. திருக்கோயில் பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.