மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில், ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிவறை கட்டும் பணிகளுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கு தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.