அப்போது டிரைவர் குமார், ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் நெடுஞ்சாலையில் காட்டரம்பாக்கம் கூட்டுரோடு அருகே பேருந்தை சாலையோரம் நிறுத்தி, மதுபோதையில் இருந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், மதுபாட்டிலால் குமார் தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதனைகண்ட பயணிகள், பலத்த காயமடைந்த குமாரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற குமார், பின்னர் இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர், மதுபோதையில் பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்காமல் ரகளையில் ஈடுபட்டு, அரசு பேருந்து டிரைவரை பீர்பாட்டிலால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.