அப்போது, சிப்காட் பகுதியில் 9 பசுமாடுகள் வாயில் நுரைதள்ளியவாறு இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள், இதுகுறித்து சிப்காட் அதிகாரிகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கும் தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சாலையில் இறந்து கிடந்த பசுமாடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் விஷம் வைத்து மாடுகள் கொல்லப்பட்டதா? அல்லது வேறுஏதாவது தின்று இறந்ததா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.