இதில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் பொறுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வினோ, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு, தூய்மை இந்தியா திட்ட பணியினை தொடங்கி வைத்தனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க கவுரவ தலைவர் மோகன்தாஸ், துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், நூலகர், தணிக்கையாளர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், செயற்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.