அதன்படி ரூ.1 லட்சம் நிதி உதவியுடன் கூடிய தமிழறிஞர் என்ற உயரிய விருதை, முதன்முறையாக பெரும்புலவர் வெற்றியழகனாருக்கு, பள்ளிக் குழுமத் தாளாளர் ப.விஷ்ணுசரண் வழங்கி கௌரவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசுத் தொகையினையும், சான்றிதழும், கேடயமும், வாழ்க்கையை நன்நெறிப்படுத்தும் நல்ல நூல்களையும் வழங்கினார். முடிவில் தமிழ் ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார். விழாவில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்தும், மாற்றுப்பொருட்கள் குறித்த சுற்றுச் சூழளுக்கான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் அடிப்படையில் 1000 பேருக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.