ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று(ஜுன் 23) அதிகாலையில் மீனவர்கள் 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைதான நிலையில் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.