இதில் பைபர் படகு கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். அப்போது அருகே மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் சக்திவேல், தேவராஜ், கார்த்திக்கேயன் ஆகியோரை மட்டும் மீட்டனர். இதில் சதீஷை மட்டும் தொடர்ந்து தேடிய நிலையில் நள்ளிரவில் அவர் மீட்கப்பட்டார். பின்னர் சேதமடைந்த படகை தங்களது படகில் கட்டி, மீட்கப்பட்ட 4 மீனவர்களையும் செருதூருக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு அழைத்து வந்தனர். பின்னர் கிராம பஞ்சாயத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதில் காயமடைந்த 4 மீனவர்களும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தார் அளித்த புகாரின்பேரில் கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.