உலக கோப்பையுடன் ரோகித், கோஹ்லி, ஜடேஜா ஓய்வு பெற்ற நிலையில், டி20 தொடருக்கான புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முழு உடல்தகுதியுடன் இல்லாததால், ‘ஸ்கை’ வசம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்கள் ரோகித், கோஹ்லி இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர். ரோகித் தலைமையிலான ஒருநாள் அணியில் சூரியகுமார், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர், இலங்கை தொடருடன் தனது புதிய இன்னிங்சை தொடங்குகிறார்.
டி20 அணி: சூரியகுமார் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பன்ட் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்திக், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
ஒருநாள் அணி: ரோகித் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), கோஹ்லி, ஷ்ரேயாஸ், ரியான் பராக், ரிஷப் பன்ட் (கீப்பர்), கே.எல்.ராகுல் (கீப்பர்), ஹர்ஷித் ராணா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.