பாம்பன்: இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கடத்தல்காரர் ஒருவரை கைது செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.