சென்னை: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகம் வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தனுஷ்கோடி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்கெனவே இலங்கையை சேர்ந்த 227 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.