படகை சோதனை செய்து படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 சாக்கு பைகளில் உள்ளே 111 பாக்கெட்களில் 99 கிலோ பழுப்பு நிறத்தில் பசை போன்ற ஹாசிஸ் (கஞ்சா ஆயில்) போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் படகில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அதில், போதைப்பொருளை பாம்பனில் இருந்து படகில் கடத்திச் சென்றதாகவும், நடுக்கடலில் இலங்கையில் இருந்து படகில் வரும் நபர்களிடம் கொடுப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று காலை பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகரை சேர்ந்த கடத்தல் நாட்டுப்படகு உரிமையாளர் ரெமிஸ்டன் (32) வீட்டில் சோதனை செய்தனர். விசாரணையில் இவர், இங்கிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ரெமிஸ்டன் மற்றும் படகில் பிடிபட்ட 3 பேர் என 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.