இந்த நிலையில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலை திட்டங்களுக்காக முந்தைய ரணில் அரசு வழங்கியுள்ள மின்சார கொள்முதலுக்கான ஒப்புதலில் முரண்பாடுகள் இருப்பதாக கூறினார். நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதானி நிறுவனத்துடனான காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தனது தேர்தல் பரப்புரையின் போது அதானியின் காற்றாலை திட்டம் இலங்கையின் எரிசக்தி இறையாண்மை அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதுடன், தான் அதிபரானால் அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.