இந்நிலையில்,இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ),தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(பிளாட்), தமிழர் முற்போக்கு கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈபிஆர்எல்எப்), தமிழர் தேசிய மக்கள் முன்னணி(டிஎன்பிஎப்)ஆகிய கட்சிகளும், தமிழ் மக்கள் காங்கிரஸ் சங்கம் உள்ளிட்ட சில சமூக அமைப்புகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.