சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையினரின் மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.