Wednesday, July 3, 2024
Home » இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது: 2 விசைப்படகு, ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல்

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது: 2 விசைப்படகு, ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல்

by Francis

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை, இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் சிறை பிடித்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளை வழிமறித்து மீனவர்களை தடுத்து விரட்டினர். வேறு பகுதிக்கு சென்ற மீனவர்கள் பாலா, கிரீன்ஸ் ஆகியோரது 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை கப்பலில் விரட்டிச் சென்று சிறை பிடித்தது.

படகுகளில் இருந்த மீனவர்கள் 15 பேரை கைது செய்தனர். ஜிபிஎஸ், மைக் கருவிகள், மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்களை படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனிடையே இரவு முழுவதும் வேறு பகுதியில் மீன் பிடித்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைப் பிடிப்பதால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

6 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi