இதையடுத்து, நேற்று மாலை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளிலிருந்து சுமார் 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அருகிலுள்ள ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இறால் பண்ணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்து யார், கடத்தலுக்கு தொடர்புடைய நபர்கள் குறித்தும் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.