ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட திட்டமிட்டுள்ளது. முன்னதாக 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ம் தேதி ஏவப்படும் என்று தேதி அறிவித்துள்ளனர்.