இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு லட்சுமண் சுருதியின் இன்னிசை பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பட்டரை பெருமந்தூர் ரூபன் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை விடார்த்தி உற்சவமும், அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.