இதை தவிர தனுஷ்கோடிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களையும் சேர்த்து 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்துள்ளனர். இலங்கை அரசோடு கடுமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினாலொழிய தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முடியாது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து, படகுகளையும் மீட்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.