Thursday, September 12, 2024
Home » இலங்கையில் தமிழக மீனவர்கள் 29 பேருக்கு காவல் நீடிப்பு

இலங்கையில் தமிழக மீனவர்கள் 29 பேருக்கு காவல் நீடிப்பு

by Ranjith

ராமேஸ்வரம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜூன் 17ம் தேதி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 30ம் தேதி கடலுக்குச் சென்ற 4 நாட்டுப்படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த 29 மீனவர்களும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை 29ம் தேதி வரை நீடித்து நீதிபதி நளினி சுபாஷ்கரன் உத்தரவிட்டார். இதனால் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi