எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் வரும் செப்டம்பர் 17ல் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என இலங்கையின் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் தனது கருத்தை தெரிவிக்கவில்லை.
ஆனால், முக்கிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும், ஜேவிபி தலைவர் அனுரா குமார திசநாயகேவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். நேற்று பேட்டியளித்த இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,‘‘ அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே நிச்சயம் போட்டியிடுவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் 2 வாரங்களில் அவர் வெளியிடுவார்’’ என்றார்.