அந்த கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் தற்போதைய அதிபர் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது நமல் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நேற்று மத்திய கண்டி மாவட்டத்தில் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி அடுத்த வாரம் தனிக்கட்சி தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.