ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு 9.30 மணியளவில் அப்பகுதிக்கு சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இதனால் மீனவர்கள் வேறு பகுதிக்கு தப்பி நேற்று காலை கரை திரும்பினர்.