தொடர்ந்து சிறிய ரக படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியதால் மீன்பிடி வலைகளை வெட்டி விட்டு கடற்படையிடம் இருந்து மீனவர்கள் தப்பினர். மேலும் மீனவர்களை விரட்டி வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கையில் பலத்த காயம் அடைந்தார். இதனால் நள்ளிரவு கடலில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் வலையில் சுமாரான மீன்கள் கிடைத்ததால் நஷ்டத்தில் இருந்து தப்பித்தனர்.