நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 மீனவர்களை கைது செய்ததோடு 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 13 மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.