தமிழ்நாட்டை சேர்ந்த 13 மீனவர்கள் மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் நேற்று (11ம் தேதி) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடி படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவு துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.