கொழும்பு : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சாந்தனின் தாயார் சந்தித்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனை இலங்கை அழைத்து வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில நாட்களில் பதில் பெற்றுத் தருவதாக டக்ளஸ் உறுதி அளித்துள்ளார்.