ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. படகில் இருந்த மீனவர்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை தங்களது கப்பலை மோதவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு..!!
previous post