இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.