சென்னை: இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். விசைப்படகில் சென்ற 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும் நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.