Wednesday, July 3, 2024
Home » இலங்கை கடற்படையினர் அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படையினர் அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

by Lakshmipathi

*ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம் : படகில் இருந்த வலைகளை வெட்டி வீசிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் குறைந்த மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும் மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் மீன்பாடு குறைவாக இருந்தது. மீன்வரத்து குறைந்ததால் எதிர்பார்த்த அளவில் வருவாய் இல்லை என மீனவர்கள் தெரிவித்தனர். மீன்பாடு குறைவால் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருந்ததாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi