சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது; ஏற்கனவே விடுவித்த படகுகளை மீட்டு கொண்டு வர மீட்பு படகுகள், பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி தரவில்லை என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.