அணில் கொடுத்த அன்புப்பரிசு!

Auxgod என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு வைரலில் உள்ளது. அதாவது பெண் ஒருவர் தினமும் தன் வீட்டு வாயிலில் ஒரு அணிலுக்கு உணவு வைத்து வந்திருக்கிறார். எதை மறந்தாலும் அந்த அணிலுக்கு உணவு வைப்பதை மட்டும் அப்பெண் நிறுத்தவில்லை போல. வழக்கம் போலவே அன்று வேலை முடித்துத் திரும்பியப் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியாக அங்கே ஒரு சிவப்பு நிறகுக்கீஸ் இருந்திருக்கிறது. சிசிடிவி கேமராவில் சோதனையிட்டபோது அந்த குட்டி அணில் வந்து தனக்கு தினமும் உணவு வைக்கும் பெண்ணுக்கு அன்புப் பரிசாக அந்த குக்கீயை விட்டுச் செல்வது பதிவாகியுள்ளது. ஒரு அணிலுக்கு பழங்கள், காய்கள், விதைகள், தானியங்கள் கிடைக்கலாம். ஆனால் எதைக் கொடுத்தால் மனிதர்கள் உண்பார்கள் என அறிந்து அதனை எடுத்துக்கொண்டு வந்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி