முளைகட்டிய பாசிப்பயறு சூப்

தேவையானவை:

முளைகட்டிய பாசிப் பயறு – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 4 பல்,
தனியாதூள் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய புதினா,
கொத்துமல்லி, எண்ணெய் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி.

செய்முறை:

வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த முளைகட்டிய பாசிப்பயறு சூப்.விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்தநிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்