விளையாட்டு மைதானங்களிலும் மதுபானங்கள் பரிமாறக்கூடாது என அறிவிக்கக்கூடாதா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: விளையாட்டு மைதானங்களிலும் மதுபானங்கள் பரிமாறக்கூடாது என அறிவிக்கக்கூடாதா என வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வைத்திருக்க அனுமதித்ததால் ஏற்படும் விளைவுகள் எப்படி சமாளிக்கப்படும் எனவும் 75,000 பேர் கூடும் மைதானத்தில், மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்ததால் என்ன ஆகும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது